எகிறும் கொரோனா

by Staff / 03-04-2023 12:41:05pm
 எகிறும் கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 219ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 892ஆக உயர்ந்துள்ளது. கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் அதிக அளவில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
 

 

Tags :

Share via