பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தவர் கைது

by Staff / 17-04-2023 03:06:09pm
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தவர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேர அலுவலில் இருந்த காவலர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்து கஞ்சா மற்றும் அரிவாள், போன்ற பொருட்களை நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர் கைப்பற்றினார்கள். மேலும் விசாரணையில் இவர் m. மணிவண்ணன்(26) கமுதி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர் மீது ராமநாதாபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்.20 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது, இவரை கைது செய்த நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் சிறப்பாக செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட காவலர்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கு. ஜவகர் இ. கா. ப அவர்கள் நேரில் அழைத்து பணம் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

 

Tags :

Share via