12 மணிநேர வேலை சட்டமுன்வடிவு மீதான மேல்நடவடிக்கை  நிறுத்திவைப்பு. முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த தோழமை கட்சியினர்.

by Editor / 24-04-2023 09:41:57pm
12 மணிநேர வேலை சட்டமுன்வடிவு மீதான மேல்நடவடிக்கை  நிறுத்திவைப்பு. முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த தோழமை கட்சியினர்.

தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு மீதான மேல்நடவடிக்கைகளை நிறுத்திவைத்ததற்காக திராவிட கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி, துணைத் தலைவர்கலி.பூங்குன்றன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற உறுப்பினர், கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் , இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர்,கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், எம்.செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ரவிக்குமார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரா.அந்திரிதாஸ் ஆகியோர் முதலமைச்சர் மு.க .ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

 

Tags :

Share via