ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
திண்டுக்கல் மாவட்டம் பழனி குறும்பட்டியை சேர்ந்தவர் வடிவேலு. இவர் மீது அடிதடி, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணியளவில் பழனி பேருத்துநிலையம் அருகே உள்ள அடிவாரம் சாலையில் மர்மநபர்கள் இருவர் வடிவேலுவை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றனர். தகவலறிந்து வந்த பழனி டிஎஸ்பி சிவசக்தி தலைமையிலான போலீசார், கொலையான வடிவேலுவின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :