கொரியரில் வந்த மண்டை ஓடு

by Staff / 04-05-2023 05:12:28pm
 கொரியரில் வந்த மண்டை ஓடு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள பள்ளிவாசல் தலைவர் முகமது காசிம்க்கு கொரியர் மூலம் மண்டை ஓடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சையை அடுத்த முகமது பந்தர் பள்ளிவாசல் தலைவர் முகமது காசிம் என்பவருக்கு மனித மண்டை ஓடு பார்சலில் அனுப்பப்பட்டதாக திருவையாறு காவல்நிலையத்தில் புகார் வந்துள்ளது. மேலும், இந்த பார்சல் திருச்சியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொரியர் மூலம் மண்டை ஓடு அனுப்பிய நபர் குறித்து திருவையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via
Logo