கோவையில் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு

கோவை மாவட்டம் குறிச்சி சக்திநகரில் மழை நீரில் வெள்ளை நாகம் ஒன்று அடித்து வரப்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து அதனை பிடித்து செல்லுமாறும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வெள்ளை நிற நாகப்பாம்பை பிடித்து மாங்கரை வனப்பகுதியில் விட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :