கள்ளச்சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது - 15 லிட்டர் கள்ளச்சாராய  ஊறல், 1 லிட்டர் கள்ளச்சாராயம்,  பறிமுதல்.

by Editor / 16-05-2023 07:40:13am
கள்ளச்சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது - 15 லிட்டர் கள்ளச்சாராய  ஊறல், 1 லிட்டர் கள்ளச்சாராயம்,  பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் தலைமையில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர்   முத்து மற்றும் உதவி ஆய்வாளர்  ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார்  சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சடையன்கிணறு லயன் தெருவை சேர்ந்த பால் மகன் சின்னத்துரை (42) என்பவருக்கு சொந்தமான சடையன்கிணறு பகுதியிலுள்ள தோட்டத்தில் சோதனை செய்ததில், அங்கு அவர் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஊறல் மற்றும் கள்ளச்சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரி சின்னத்துரையை கைது செய்து அவரிடமிருந்த 15 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 1 லிட்டர் கள்ளச்சாராயம், ஒரு கேஸ் ஸ்டவ் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via