சி.விஜயபாஸ்கர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

by Staff / 22-05-2023 12:58:04pm
சி.விஜயபாஸ்கர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக்கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த சி.விஜயபாஸ்கர் மீது இன்று, 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதே போல், சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via