படுக்கைக்கு அடியில் மறைந்திருந்த ஊழியர், இளம்பெண்ணுக்கு டார்ச்சர்
சென்னை அடுத்த கூவத்தூரில் தனியார் பண்ணை வீட்டில் பணிபுரியும் சுபாஷ் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அறையில் மறைந்திருந்த ஊழியர், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அப்போது அந்த பெண்ணுடன் இருந்த ஆண் நண்பர் குற்றவாளியை பிடித்து அடித்து உதைத்துள்ளார். பின்னர், குற்றவாளி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. கே.கே.நகரைச் சேர்ந்த இளம்பெண்ணும் அவரது காதலரும் வெள்ளிக்கிழமை பண்ணை வீட்டுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
Tags :