தூய்மை பணியில் மேற் கொள்ள வெளிமாநிலத்தவரை ஈடுபடுத்த எதிர்ப்பு.
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தூய்மை பணி மேற்கொள்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து 80 பேர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக இன்று 19பேர் தூய்மை பணி மேற்கொண்டனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டி மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் நகராட்சியின் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயற்சி செய்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags :