ஒமைக்ரான் யாரையும் விட்டு வைக்காது"குடும்பத்தையே கொலை செய்த பேராசிரியர்.

by Editor / 05-12-2021 03:15:42pm
ஒமைக்ரான் யாரையும் விட்டு வைக்காது

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண் பூரில்  உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சுஷில் சிங், இவரது மனைவி சந்திரபிரபா,மகன் ஷிகார் சிங், மகள் குஷி சிங் ஆகியிருடன் வசித்துவந்த அவர் சம்பவத்தன்று 

சுஷில் சிங் தனது மனைவி, மற்றும் 2 குழந்தைகளையும்  கொலை செய்துவிட்டு  தப்பி ஓடிவிட்டார். கொலை செய்து தப்பியோடுவதற்கு முன்பு, தனது சகோதரருக்கு வாட்ஸ் அப்-ல் மெசேஜ் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார். அதில் 'ஒமைக்ரான் மாறுபாட்டில் இருந்து யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள்'. எனவே அனைவரையும் விடுவிக்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். அந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சியடைந்த சகோதரர், உடனே அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பூட்டி இருந்த வீட்டை உடைத்து திறந்து பார்த்த போது தனது சகோதரரின் மனைவி மற்றும் குழந்தைகள் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளார்.

மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பேராசிரியரின் டைரியையும் கைப்பற்றினர். அதில், தனது குடும்பத்தினரை கொலை செய்தது குறித்தும், ஒமைக்ரான் மாறுபாட்டைப் பற்றியும் அவர் எழுதியுள்ளார்.

'இப்போது, ​​​​இறந்த உடல்களை எண்ணுவது தேவையில்லை' என்றும், ​​​​கொரோனா வைரஸ் அனைவரையும் கொல்லும்' என்றும் அவர் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via