by Staff /
27-06-2023
01:43:48pm
சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா, தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதித்தார். அப்போது, “அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது நிரூபணமாகியுள்ளது. அமர்வு நீதிமன்றமும் மனதை செலுத்தி ஆராயாமல் இயந்திரத்தனமாக சட்டவிரோத கைதை ஏற்றுள்ளது. கைதுக்கான மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் என்பது குறித்த பதிவுகள் இல்லை. இரவு 1.39க்கு கைது குறித்த தகவல் காலை 8:12க்கு தான் தெரிவிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
Tags :
Share via