by Staff /
04-07-2023
03:43:09pm
டெல்லியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக முதலாம் ஆண்டு மாணவர்களை தேர்வு எழுத வைத்தது விசாரணையில் தெரியவந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியுள்ளார். இந்த கும்பல் ஒரு மாணவருக்கு தலா ரூ.7 லட்சம் வசூல் செய்து ஆள்மாறாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags :
Share via