முதியவரின் உயிரை பறித்த ஆடு

by Staff / 04-07-2023 04:22:28pm
முதியவரின் உயிரை பறித்த ஆடு சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள மதன்பூரில், ஆடு ஒன்றின் கண் ஒருவரின் உயிரைப் பறித்தது. கிராமத்தில் வசிக்கும் 50 வயதான பாகர் ராய், ஆடுகளை அறுத்து அவற்றின் இறைச்சியுடன் சமையல் செய்து சாப்பிட்டார். ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது தவறுதலாக ஆட்டின் கண் தொண்டையில் சிக்கி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.  
 

Tags :

Share via