அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது

by Staff / 09-07-2023 04:03:55pm
அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது ஜம்மு காஷ்மீரில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை மதியம் மீண்டும் பயணம் தொடங்கியது. இருப்பினும், பயணம் பஹல்காம் பாதையில் மட்டுமே தொடங்கியது. பால்டால் பாதையில் இன்னும் நிலைமை சீரடையாததால், பயணம் இன்னும் தொடங்கப்படவில்லை. அமர்நாத் குகைக்கோயிலுக்குள் சென்று இயற்கையாக உருவாகியிருக்கும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்தனர். ஏற்கெனவே தரிசனம் செய்த பக்தர்கள் மீண்டும் பல்டால் முகாமிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அங்குள்ள சூழ்நிலையை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்
 

Tags :

Share via