நாயை ஏவி ஆண் நண்பரின் மகளை கொன்ற பெண்

by Staff / 01-09-2024 03:02:21pm
நாயை ஏவி ஆண் நண்பரின் மகளை கொன்ற பெண்

அமெரிக்காவை சேர்ந்த 9 வயதான ஜமாரியா என்ற சிறுமி தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் அந்த சிறுமியுடைய தந்தையின் பெண் தோழியான எலீஸ் மார்டினை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறுமியின் உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை அவர்கள் பார்த்தபோது, எலீஸா மார்டின் தனது ராட்வெய்லரை வலுக்கட்டாயமாக சிறுமி மீது ஏவிவிட்டதும், ஈவு இரக்கமின்றி சிறுமியின் தலையிலும், காலிலும் உதைத்து கொன்றதும் தெரியவந்தது.

 

Tags :

Share via