5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
உத்திரப் பிரதேசம் சஹாவரல் பகுதியில், இளைஞரை அடித்தும், முகத்தில் சிறுநீரை ஊற்றியும் திருநங்கைகள் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்ஹு என்ற நபர் நடனமாடும் தொழிலை செய்து வந்துள்ளார். இவரை தங்கள் அணியில் சேர திருநங்கைகள் சிலர் வற்புறுத்தியுள்ளார். நன்ஹு அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவர் தனியாக இருக்கும்போது திருநங்கைகள் இந்த கொடூரத்தை செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கூறும்போது, அவர்கள் தனது பாலினத்தை வலுக்கட்டாயமாக மாற்ற முயன்றதாகவும், வாயில் சிறுநீர் கழித்ததாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
Tags :