வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 400 பேரூந்து.
தமிழகத்தில் இனி வார இறுதி நாட்களையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இனி வார இறுதி நாட்களையொட்டி தமிழகத்தில் இன்று முதல் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து 200, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூருவிலிருந்து பிற இடங்களிலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது. மேலும், அசௌகரியத்தை தவிர்க்க, முன்பதிவு செய்து பயணிக்கும்படி போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Tags :