மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய குடியரசு தலைவர்
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பட்டமளிப்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''குடியரசு தலைவர் வருகை சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏராளமான குடியரசுத் தலைவர்கள் படித்த பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பேரறிஞர் அண்ணா சென்னை பல்கலையில் தான் படித்தார், நானும் இங்கு தான் படித்தேன்'' என்றார்.
Tags :