அலட்சியம் கூடாது - கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் அறிவுரை
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் இருந்து பள்ளிக் கல்வி இயக்கக இயக்குநர் க. அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 16-ம் தேதி நீதிமன்ற தீர்ப்பாணையை நிறைவேற்றுவதில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) ஆகியோரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இனி வரும் காலங்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் துரிதமாகச் செயல்படுத்தவும், இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாத வகையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி) விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Tags :