நாடகம் என்பதா - தி. மு. க. தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் ஓபிஎஸ் கண்டனம்

by Staff / 14-08-2023 05:12:24pm
நாடகம் என்பதா - தி. மு. க. தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் ஓபிஎஸ் கண்டனம்

1989 ஆண்டு அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை நாடகம் என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக சட்டமன்றப் பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதை ‘நாடகம்’ என்று சொல்லும் தி. மு. க. தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு கடும் கண்டனம்

25-03-1989 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகளை நன்கு கண்ணுற்றும் அதனை ‘நாடகம்’ என்று சொல்வதுதான் ‘நாடகம்’. 25-03-1989 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை ‘நாடகம்’ என்று சொல்வது முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். அன்று நடந்தது உண்மை என்பதை மக்கள் அடுத்து வந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் உணர்த்தி விட்டார்கள் என்பதை தி. மு. க. தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒருவேளை உண்மையை ‘நாடகம்’ என்று சொல்வதுதான் திராவிட மாடல் போலும்! " என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

 

Tags :

Share via