இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்-சரியான திட்டமிடல் இல்லை - அமைச்சர் சேகர் பாபு

by Staff / 28-08-2023 12:20:14pm
 இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்-சரியான திட்டமிடல் இல்லை - அமைச்சர் சேகர் பாபு

சென்னையில் இன்று செய்தியாளர்களை  சந்தித்த அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகர்பாபு , “மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல், மக்களுக்கான அடிப்படை வசதிகள் போன்ற விஷயங்கள் குறித்து சரியான திட்டமிடல் இல்லாமல், கடந்த ஆட்சி காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கட்டமைத்துள்ளனர். புதிய மழைநீர் வடிகால் அமைப்பதற்கு 17 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்” எனத் தெரிவித்தாா்.

 

Tags :

Share via