ஈபிஎஸ்-க்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்.எஸ் பாரதி 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தது. மேலும், திமுக சார்பில் ஆஜரான கபில் சிபல், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும் ஆஜரானதை ஈபிஎஸ் தரப்பு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.
Tags :