குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் பொன்முத்துபாண்டியன் (வயது 30). இவரை கோவில்பட்டி மேற்கு போலீசார் வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பொன்முத்துபாண்டியனை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார். நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் உட்பட 124 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
Tags :