குடிநீர் வழங்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் - உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறையினர் மறுத்ததால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்ட கழுகுமலை பேரூராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், சீராக குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கழுகுமலை பேரூராட்சி பகுதியில் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கழுகுமலையில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள போலீசார் அனுமதி கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து கழுகுமலை கழுகசலமூர்த்தி திருக்கோவில் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதையொட்டி கழுகுமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags :