சிறப்பாக பணியாற்றிய எஸ்.பி.க்களுக்கு முதல்வர் விருது.
சென்னையில் நடைபெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், முதலமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து குறை தீர்வு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக 2023ஆம் ஆண்டிற்கான விருதினை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன்,உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான 2023ஆம் ஆண்டிற்கான விருதுகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவட், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ராஜேஷ் கண்ணன், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாகெர்ல சிபாஸ் கல்யாண், ஆகியோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
Tags : சிறப்பாக பணியாற்றிய எஸ்.பி.க்களுக்கு முதல்வர் விருது