செய்த வேலைக்கு சம்பளம் கேட்டதால் அடிதடி கத்தி குத்து
திண்டுக்கல் மைலாப்பூரில் செபஸ்தியார் என்பவரின் மகன் அதே ஊரை சேர்ந்த ஸ்டீபன் என்பவரிடம் மரம் வெட்டும் வேலைக்கு சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஸ்டீபன் சம்பளம் தரவில்லை. இதை ஜெகன் கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே ஸ்டீபன், ஜெகன் என்பவரின் சட்டையை கிழித்து சரமாரியாக தாக்கியுள்ளார். தன்னை ஸ்டீபன் சம்பளம் கேட்டதுக்காக அடித்த விசயத்தை ஜெகன் அவருடைய தந்தையிடம் சென்று கூறியுள்ளார்.தன் மகனை ஏன் அடித்தாய் என செபஸ்தியார் கேட்ட போது ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஸ்டீபன் கத்தியால் செபஸ்தியாரை குத்தியுள்ளார். அக்கம் பக்கத்தினர் செபஸ்தியாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஸ்டீபனை தேடிவருகின்றனர்.
Tags :