மது போதையில் வாக்குவாதம் கழுத்தை நெரித்து கொலை -பெண் கைது

by Staff / 22-10-2023 03:41:36pm
மது போதையில் வாக்குவாதம்  கழுத்தை நெரித்து கொலை -பெண் கைது

எண்ணூரை சேர்ந்தவர் சுப்பையா.   மனைவி இறந்து விட்டார். மகன் மற்றும் மகள் தனித்தனியே திருமணமாகி வசித்து வரும் நிலையில், நேற்று அவர் அதிகாலை வீட்டில் சடலமாக கிடந்தார். பிரேத பரிசோதனைக்காக சடலத்தை கைப்பற்றி போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதே பரிசோதனையில், சுப்பையா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது..போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மனைவி இறந்த நிலையில் செல்வி என்பவருடன் சுப்பையா குடும்பம் நடத்தி வந்துள்ளார்..  மதுபோதையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, செல்வி, சுப்பையாவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via