6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த 12 பேர் கைது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கடந்த மாதம் 28-ம் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு நகைகள் வாங்கிச் சென்ற பிரசன்னா என்பவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல், காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி அருகே, காரை வழிமறித்து கடுமையாக தாக்கி காருடன் 5.9 கிலோ தங்கம் மற்றும் பணம் 60 லட்சம் ரூபாய் கடத்தி சென்றனர். இதனை அடுத்து பிரசன்னா காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது, சொகுசு காரை மட்டும் கொள்ளையர்கள் விட்டு விட்டு,
தங்க நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றனர்.இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிரமாக பல்வேறு மாநிலங்களில் செல்போன் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளை சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும் அனைவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து வந்த குற்றவாளிகளை 10 தனிப்படை போலீசார் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்தனர்,இந்தநிலையில் கொள்ளையர்கள் சென்னையில் தங்கிஇருப்பதாக கிடைத்ததகவலைத்தொடர்ந்து 9 குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்து கடத்தப்பட்ட 6 கிலோ தங்கம் மற்றும் 19 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் தலைமறைவாக இருந்த 6 குற்றவாளிகளில் ஆசிப் (32), விஷ்னு (27), அக்க்ஷய் சோனு (22) ஆகிய 3 பேரை ஓசூரில் ரிங் ரோடு அருகே கைது செய்து சிறையில் அடைத்தனர்.இன்னும் 3 பேரை தனிப்படையினர் தேடிவருகின்றனர்.
Tags : 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த 12 பேர் கைது.