கணவனை கடைக்கு அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய இளம்பெண்

அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைகல்மேடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அருண்குமார் (வயது 31). இவரது மனைவி ஹேமலதா (27) கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஹேமலதா, நேற்று முன்தினம் வீட்டிலிருந்த அருண்குமாரை மாத்திரை வாங்கி வருமாறு மருந்து கடைக்கு அனுப்பியுள்ளார்.பின்னர் வீட்டிலிருந்த மின்விசிறி மாட்டு்ம் கொக்கியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு ஹேமலதா தொங்கியுள்ளார். மருந்து வாங்கிய பின் வீட்டுக்கு வந்த அருண்குமார் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனே ஹேமலதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஹேமலதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :