தெரு நாய் கடித்து சிறுமி உயிரிழப்பு

by Staff / 28-10-2023 05:24:43pm
தெரு நாய் கடித்து சிறுமி உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தெரு நாய் கடித்து சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில ஆக்ராவில் தெரு நாய் கடித்த 8 வயது சிறுமிக்கு அவரது தாய் வீட்டிலேயே வைத்தியம் பார்த்துள்ளார். இந்நிலையில், ரேபிஸ் நோய் பாதித்து 15 நாட்களில் சிறுமி உயிரிழந்துள்ளார். நாளுக்கு நாள் உடல்நிலை மோசமான பிறகு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, நாய் கடித்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

 

Tags :

Share via