நிலம் தருவதாக 91 பேரிடம் ரூ. 2 கோடி ஏமாற்றியவர் கைது

by Staff / 04-11-2023 05:15:04pm
நிலம் தருவதாக 91 பேரிடம் ரூ. 2 கோடி ஏமாற்றியவர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 32; ஒரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மணிகண்டன் உட்பட 91 பேர் சேர்ந்து, தொழிலாளர் சங்கம் மூலமாக, கே. கே. , நகர், பி. டி. , ராஜன் சாலையில் உள்ள 'ரெனில் எஸ்டேட்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்த மணவாளன், 53, என்பவரை அணுகினர். அவர், மறைமலை நகர், கூடலுார் கிராமத்தில், சதுர அடி 900 ரூபாய்க்கு நிலம் விற்பனை செய்வதாக கூறி, 91 பேரிடம் இருந்து, 2021, நவ. , மாதம், 2 லட்சம் முதல் 2. 50 லட்சம் வரை வாங்கியுள்ளார்.

மொத்தம் 2. 10 கோடி ரூபாயை வாங்கி, நிலம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பணத்தையும் கொடுக்காமல், நிலத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக, மணவாளன் மீது, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர். தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த மணவாளன், 53, என்பவரை, காட்டாங்கொளத்துாரில், நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via