பாலியல் தொழில் - இருவருக்கு 10 ஆண்டு ஜெயில்

by Staff / 05-11-2023 03:15:31pm
பாலியல் தொழில் - இருவருக்கு 10 ஆண்டு ஜெயில்

சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்ராதேவி (46), தஸ்தகீர் (39). இவர்கள் இருவரும் பெண்கள் மற்றும் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தனர். புகாரின் பேரில், சித்ராதேவி, தஸ்தகீர் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருநாவுக்கரசு உடல்நலக் குறைவால் 2021இல் இறந்துவிட்டார். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில், சித்ராதேவி, தஸ்தகீருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via