கயத்தாறில் அதிமுக பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை

by Admin / 29-07-2021 02:43:44pm
கயத்தாறில் அதிமுக பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை

 


 
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அதிமுக பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற கருப்பசாமி (வயது41).
இவர் கயத்தாறு நகர அ.தி.மு.க. இளைஞர் பாசறை இணைச் செயலாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில் கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் குடும்ப பிரச்சனையில் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இவருக்கும் அவரது மனைவி முத்துலெட்சுமிக்கும் இடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த முத்துலெட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்த கார்த்திக் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via