நாகர்கோவிலில் மது விற்ற திருநங்கை கைது.
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் மது பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் நேற்று வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் பள்ளிக்கூடம் தெரு பகுதியில் மது பதுக்கி வைத்து விற்பனை செய்த திருநங்கை நிஷா(45) என்பவரை கைது செய்து 17 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Tags :