இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் பலி

by Staff / 11-11-2023 12:03:28pm
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் பலி

வாணியம்பாடி அருகே பெங்களூருவில் இருந்து வந்த அரசுப்பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற தனியார் சொகுசுப் பேருந்தின் மீது மோதிய விபத்தில் 5 பேர் ம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் ஆண்கள் ஒரு பெண் ஆவார். பெங்களூரில் இருந்து வந்த அரசு பேருந்து வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்துக் கொண்டு சென்றது. அப்போது வாணியம்பாடி அருகே சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்து மீது அரசு பேருந்து மோதியது.

 

Tags :

Share via

More stories