படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி:

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் தாசன் மகன் சகாயராஜ் (58). மீனவரான இவர் கடந்த 18ஆம் தேதி மெரிட்டன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் 5பேருடன் கடலுக்குள் மீன் பிடிக்க தங்கு கடல் சென்றார். தூத்துக்குடியில் இருந்து 21 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடலுக்குள் கால் தவறி விழுந்தார்.இதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மீனவரின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :