வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 22-11-2023 02:53:43pm
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 40 ஆயிரம் பணம் எடுத்த நிலையில் புகார் அளிக்க போலீஸ் நிலையத்திற்கு தாய் அழைத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை கோவை பீளமேடு ராஜகோபால் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் விஷ்வா இவர் கண்காணிப்பு காமிரா பொருத்தும் வேலை செய்து வந்தார். விஷ்வா அவரது தாய் கீதா வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் ரூ. 40 ஆயிரம் பணத்தை எடுத்தார். இதுகுறித்த மெசேஜ் வங்கியில் இருந்து கீதாவின் செல்போன் எண்ணுக்கு சென்றது. யார் பணத்தை எடுத்தார் என்பது தெரியாததால் போலீசில் புகார் அளிக்க கீதா முடிவு செய்தார். அதன்படி வெளியே சென்று இருந்த அவர் தனது மகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்லாமல் என அழைத்தார். போலீசில் புகார் அளித்தால் தான் பணத்தை எடுத்தது தெரிந்துவிடும் என்ற பயத்தில் இருந்த விஷ்வா சாணிப்பவுடரை கரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் விஷ்வா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via