அக்னி பாத் பயிற்சி பெண் தற்கொலை

by Staff / 28-11-2023 03:30:02pm
அக்னி பாத் பயிற்சி பெண் தற்கொலை

கேரளாவைச் சேர்ந்தவர் அபர்ணா நாயர்(20). இவர் அக்னி பாத் திட்டத்தின் கீழ் சேர்ந்து, கடற்படை பயிற்சிக்காக மும்பை வந்திருந்தார். அவர் மலாடின் மேற்குபுறநகர் பகுதியின் மல்வானி பகுதியில் உள்ள ஐஎன்எஸ் ஹாம்லாவில் பயிற்சி பெற்றுவந்தார்.இந்தநிலையில், தனது விடுதி அறையில் நேற்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டதில் அவர் இறந்துவிட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவம் குறித்து மும்பை மல்வானி போலீஸார் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via