மாணவரை வெட்டிய 6 பேர் கைது

by Staff / 01-12-2023 04:45:19pm
 மாணவரை வெட்டிய 6 பேர் கைது

சென்னை ஓட்டேரி, மங்கலபுரம், புதுவாழை மாநகரைச் சேர்ந்தவர் யஷ்வந்த் ராயன் (வயது 24) திருப்பதி சட்டக் கல்லுாரியில், 2ம் ஆண்டு படிக்கிறார். கடந்த 27ம் தேதி நள்ளிரவு அம்பத்துார் அடுத்த புதுார் போலீஸ் உதவி மையம் அருகே மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அம்பத்துார் போலீசார் விசாரணையில் அயனாவரம், ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி சரண் (வயது 30), சஞ்சய் (வயது 25), ஆலந்துார், ஆசர்கானாவைச் சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 23), முருகவேல் (வயது 23), ஜமால் முகமது (வயது 23), தாமஸ் மலை ஜீவா (வயது 18) ஆகியோர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில் சஞ்சய்க்கும், யஷ்வந்த் ராயனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. அதைப் பற்றி பேச வேண்டுமென, அம்பத்துார் அடுத்த புதுாருக்கு அழைத்து, அவரை வெட்டியது தெரிந்தது. நேற்று காலை, மேற்கண்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் சரண், கோட்டீஸ்வரன், ஜமால் முகமது ஆகியோருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

 

Tags :

Share via