சென்னை உயர்நீதிமன்றம் வழக்கம்போல் நாளை இயங்கும்.

மிக்ஜாம் புயல் நாளை கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் வழக்கம்போல் நாளை இயங்கும் என அறிவிப்பு.மழையால் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் ஆஜராகவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது. பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Tags : சென்னை உயர்நீதிமன்றம் வழக்கம்போல் நாளை இயங்கும்.