அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள எலுவப்பள்ளியில் இருந்து ஒசூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், பாகலூர் நோக்கி சென்ற தனியார் பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிறரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
Tags :