காங்கிரஸ் தலைவரை கொலை செய்தது உறவினர்களா

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மர்ம மரண வழக்கு குறித்து போலீசாரர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது போலீசாரின் விசாரணையில், ஜெயக்குமார் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பல பொருட்கள் அவரது வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரது உறவினர்களே அவரை கொலை செய்திருக்ககூடும் என்ற கோணத்தில் போலீசார் இறுதி கட்ட விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :