பூமி சம்மான்" விருதுகளை வழங்கும் குடியரசு தலைவர்
டெல்லியில் ஜூலை 18ஆம் தேதி இந்த ஆண்டுக்கான “பூமி சம்மான்” விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார். இந்த விருது விழாவில் டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட 9 மாநில செயலாளர்கள் மற்றும் 68 மாவட்ட ஆட்சியர்கள் விருது பெற உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்த “பூமி சம்மான்” விழாவில் பலர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :