தாய்லாந்தில் பயங்கர சாலை விபத்து..14 பேர் பலி

by Staff / 06-12-2023 05:32:13pm
தாய்லாந்தில் பயங்கர சாலை விபத்து..14 பேர் பலி

தாய்லாந்தில் பயங்கர சாலை விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 49 பயணிகளுடன் பாங்காக்கில் இருந்து சோங்காக்லா மாகாணத்திற்கு பேருந்து புறப்பட்டது. இந்நிலையில் வனகார்ன் தேசிய பூங்கா அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 14 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via