21 பேரின் தலையை வெட்டி கொன்ற மந்திரவாதி
பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி 21 பேரின் தலையை துண்டித்து கொன்ற மந்திரவாதியை ஆந்திர போலீசார் கைது செய்தனர். கர்னூலைச் சேர்ந்த சத்யம் என்ற மந்திரவாதியிடம் பில்லி, சூனியத்தை நீக்க வேண்டி பலர் அணுகியுள்ளனர். அதில், வசதியானவர்களை மட்டும் குறிவைத்த மந்திரவாதி, அவர்களை ஏமாற்றி சொத்துகளை அபகரித்ததுடன் கொலையும் செய்துள்ளார். இதனிடையே, மந்திரவாதியை பிடித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :