உயிரிழந்த தந்தை சடலத்துடன் 3 நாள் இருந்த மகன்.

by Staff / 13-12-2023 02:28:39pm
உயிரிழந்த தந்தை சடலத்துடன் 3 நாள் இருந்த மகன்.

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் 1வது தெருவில் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்த ஜெகதீசன் ( 74) என்பவர் ஒரு ஜோதிட பேராசிரியரியர். இவர் MA. , (ஜோதிடம்) M. phil. படித்துள்ளார் .இவருக்கு கார்த்திக் சீனிவாசன்(40) என்ற மகனும் ஷர்மிளா ( 44) ஒரு மகளும் உள்ளனர்.இந்நிலையில் மகள் திருமணமாகி கணவர் சிவகுமாருடன் வில்லாபுரம் வைகை குடியிருப்பில் வசித்து வருகிறார்.இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தந்தை ஜெகதீசனுக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர் கார்த்திக் சீனிவாசனுக்கும் உணவு அளித்து வந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 10ம் தேதி ஞாயிறு கிழமை தனது தந்தையை பார்த்தவர் அதன் பின்பு பார்க்கவில்லை என்று தெரிகிறது. மேலும் இவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு கடைகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த கடை நடத்துபவர்கள் மேல் வீட்டில் துர்நாற்றம் வீசுவதை கண்டு மேலே சென்று பார்த்தபோது இறந்த நிலையில் இருந்த ஜெகதீசன் உடல் அருகே மகன் தியான நிலையில் அமர்ந்திருந்தது அதிர்ச்சி அளித்தது. பிரேதத்தை அவனியாபுரம் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via