இலங்கைக்கு 529 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது.

by Staff / 13-12-2023 04:33:59pm
இலங்கைக்கு 529 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார்- பெரியசாமிபுரம் பகுதி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் வேம்பார் பெரியசாமிபுரம் பகுதியில் ரவுண்டு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 529 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது, இதனை அடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த சேதுபாண்டி என்பவரின் மகன் தர்மேந்திரன் (36) மற்றும் தூத்துக்குடி பிரேயர்நகர் பகுதி சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் சிவராஜ்(41) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 529 கிலோ கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் காவல் நிலையம் கொண்டு கொண்டு வந்தனர், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் சொகுசு காரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு செய்தார். சிறையில் அடைத்தனர். பின்னர் தர்மேந்திரன் மற்றும் சிவராஜ் ஆகிய இருவரையும் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via