மத்திய அரசின் புதிய திட்டம்: பெண்களுக்கு நற்செய்தி

by Staff / 22-12-2023 11:36:52am
மத்திய அரசின் புதிய திட்டம்: பெண்களுக்கு நற்செய்தி

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NBCFDC) பெண்களின் நலனுக்காக ஸ்வர்ணிமா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் வணிக உரிமையாளர்கள், விவசாயிகள், தெருவோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு காலக் கடன் வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் கடன் வழங்கும். விண்ணப்பதாரர் பெண்ணாக இருக்க வேண்டும். வயது 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

 

Tags :

Share via