முக்கிய அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளது.
எனவே பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்க வேண்டாம்; கால்நடைகளையும் இறக்க வேண்டாம். பெருவெள்ள அபாயம் எதுவுமில்லை.
இன்னும் ஓரிரு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது
Tags :